cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 கவிதைகள்

சாயல் இல்லாத…!


நடுநிசி தாண்டிய 

ஓசையற்ற…

நீர்க்குமிழி வீதியில்

அடையாளமற்றுத்

தொலைகிறேன்!

 

நீ வந்து சென்ற 

தடத்தை…

காற்று உதிர்த்த 

மாவிலை….

மொழி பெயர்த்திருந்தது!

 

சமீபகாலத்தில் 

உந்தன் 

நித்திய சொற்கள் 

அந்நித்தியமாகி

நிற்பது… 

கோவில் மாடப் புறாக்களுக்குப் 

புரியாமல்  இல்லை!

 

ஒருமித்துப் பயணிக்கும்

நடைபாதையில்…

யாரோ இசைக்கும்

கானல் வரி பாடல்…

நமக்கானது என்பதை 

எப்படிச் சொல்லமுடியும்?

 

காய்ந்த பின்பும்

மணக்கும்… 

மகிழும் பூவின் விசனத்தை 

வரம் என்பதாகவே 

கருதுகிறேன்!

 

நிழலாடும் பொழுதில்

மறக்காமல்… 

திரும்பிப் பார்க்கிறேன். 

அங்கு எவருமில்லை!

 

நீண்ட நாட்களுக்களாகி

விட்டது!

பரவாயில்லை…

துருவ நட்சத்திரமாக…

உனக்கே தெரியாமல்

காத்திருக்கிறேன்.

 

தோன்றும் போது மட்டும்… 

நீ பேசு!

 

அப்போது தான்…?

சாயல் இல்லாத

ஒரு புள்ளியில் 

நிஜத்தை… 

அவதானிக்க முடியும்!


கவிதைகள் வாசித்த குரல்:
நெல்லை. க. சோமசுந்தரி
Listen On Spotify :

About the author

நெல்லை. க.சோமசுந்தரி.

நெல்லை. க.சோமசுந்தரி.

நெல்லையைச் சேர்ந்த தனியார் துறையில் வேதியியல் பாடநூல் வல்லுநராக (SME) பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். தமிழில் பேச்சரங்கம், ஆய்வரங்கம், கவிதைகள் எழுதுதல், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பட்டிமன்ற பேச்சு, நேர்காணல், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்புகள் என பல செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை பெற்றுள்ளார். தொல்லியல், வரலாற்று ஆய்வியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் உள்ள இவரின் ஹைக்கூ, லிமரைக்கூ சென்ரியு, ஹைபுன், தன்முனை மற்றும் புதுக் கவிதைகள், கட்டுரைகள் ஆகியன நாளிதழ்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு இலக்கிய இதழ்களில் வெளி வந்துள்ளன. கவிதைகளுக்காக பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website