cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 37 கவிதைகள்

ஒரு வேளை

மிருணா
Written by மிருணா

நினைவில் இருந்து
சந்திப்புகளைத் தீட்ட முயற்சிக்கிறாள்
எவ்வளவு முயன்றும்
உருவம் கூடி வரவில்லை
அவன் வருவதாய்ச் சொன்னதற்கும்
அவன் வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில்
மனம் கொள்ளும்
சொல்லொணா அழகமைதியை
எந்தத் தைல வண்ணத்தில் வடிப்பது அவள்?
பயணத்தில் ஒரு முறை
குதிக்கும் பெருந் கற்களாய் மழை பொழிய
கண்ணாடி எங்கும் நீர்த் திரை விரைந்து நழுவ
வீடுகளில்லா விரிசாலையில்
விக்கித்து நின்ற பேருந்தெங்கும்
நிறை மௌனம்.
வேண்டுமானால் அதைக் கொண்டு அவள்
வண்ணம் தீட்டிக் கொள்வாளாயிருக்கும்.


..

About the author

மிருணா

மிருணா

முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர் மிருணா. வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website