கடல் அதனுடைய
குழந்தைப் பற்களை
இழந்துவிட,
அவை கரை மீது கிளிஞ்சல்களாயின.
ஒவ்வொரு நாளும்
அதற்கு புதிய பற்கள் முளைக்கின்றன;
ஒவ்வொரு இரவும் அது
அப்பற்களை அதிகமாக இழக்கவும் செய்கிறது.
கடல் தனது பற்களை
கரையில் பரப்பி வைக்க,
அதனின்றும் ஒரு கையளவு சேகரித்து
நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
ஆதலால்
கடலினுடைய புன்னகையில் ஒரு பகுதியை
என்னால் பத்திரப்படுத்தி
வைக்க முடிந்தது.
தமிழில் : க.மோகனரங்கன்