cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

மலர்விழி கவிதை


விலகியிருக்கும் மைல்கற்களின்
உரையாடல் என்னவாயிருக்கும்

யுத்தத்திலிருந்து திரும்பியவனின்‌ காதுகளாய்
தவிக்கும்‌ மனதோ
சதா உருமாறும் விலங்கு

நேசத்திற்கு ஏங்கும் பொழுதில்
வேரை மறுக்கும் மணலில்
பிடிவாதம் காட்டும் தாவரம் ஆசை

தலைகோதும் அன்பின் பிடிப்பில்
தவிக்கும் மான்குட்டியின் மருண்ட விழிகள்
இந்தப் புது மனநிலை

உறவை நிரூபிக்கச் சொல்லும் நாளில்
ஜேசிபியின்‌ கரங்களுக்கு
வாரிக் கொடுத்த மலையின் மீட்சி
உன் வாசம்

ஆழ்ந்த ரணம் ஆறாத காலம்
தன்னை பணயம் வைத்து
பதிலுக்கு பெறப்படும்‌ மதுக்கோப்பை
மனமுருகிய நினைவுகள்

கசையடிகளுக்கு பழக்கப்பட்ட வாழ்வில்
உன் மடி சேர்ந்து பெறப்பட்ட முத்தக்கணம்
சட்டகத்தின்‌ பின்‌ இடப்பட்ட தேதி


கவிதைகள் வாசித்த குரல்:

பிருந்தா இராஜகோபாலன்

Listen On Spotify :

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் )

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website