cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

குமரகுரு கவிதைகள்


இலைகளின் இடைவெளியை நோக்கிப் பாய்கின்றன
பூமியை வேட்டையாடும்
மழை அம்புகள்!

***

நகர்கின்ற உயிர்கள்
நகரா உயிர்களுக்கான
கதைகளை சேகரிக்கின்றன!

***
கவிழ்ந்த படகு மேடையில்
அமர்ந்திருக்கும் பறவைக்கு
பாடத் தெரியவில்லை

***

உங்களுக்குத் தேவையான மலைகளை உடைத்துக் கொள்ளுங்கள்
வெடிகுண்டுகளால் தகர்க்க முடிந்த மலைகளைத் தகர்த்துக் கொள்ளுங்கள்
எங்களிடம் பல்லாயிரம் சிறு மண்துகள்கள் உண்டு
மலை செய்து கொள்வோம்!
தகர்ந்த மலைகளின்
சிறிய துகள்கள் வளர்ந்து
நிற்கும் போது
மலைத்துப் போவீர்கள்!
மலைத்துப் போவீர்கள்!
நடு இரவில் வயல் நடுவில் வீழ்ந்த பனை நிழலைப் பார்த்து அஞ்சுவதைப் போல…


கவிதைகள் வாசித்த குரல்:
பிருந்தா ராஜகோபாலன்
Listen On Spotify :


 

About the author

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website